பொழுதுபோக்கு

👨 யார் ஆண்களில் அழகானவர்..?

|
Share: |

பெண்களுக்குறிய ஹக்கை கொடுத்து மனைவி மக்களை நன்றாக கஞ்சத்தனம் இல்லாமல் வழி நடத்துகின்ற ஆண்களே....... ஆண்களில் அழகானவர்.

பெண்களை தரைக்குறைவாக மோசமான முறையில் வழிநடத்தும் ஆண்கள் அல்லாஹ் வை அஞ்சுங்கள்.

நபி ஸல்லல்லாஹூ அலைஹி அவர்கள் கூறினார்கள்.

ஸதகாவில் சிறந்தது உங்களது மனைவி குழந்தைகளுக்கு செய்யும் சதகா அனைத்தையும் விட மேலான சதகாவாகும்.

இன்று எத்தனையோ திருமண முடித்த ஆண்கள் இஸ்லாத்தை, திருமண வாழ்க்கை வழி முறையை அறை குறையாகவே அறிந்து கொண்டு திருமண பந்தத்தில் கால் பதிக்கிறார்கள்...

இப்படியானவன்களுக்கு கேடு உண்டாகட்டும்

ஏ...! மனிதக் குளாமே திருமணம் என்பதும் ஒரு இறை வணக்க வழிபாடுகளில் உள்ள ஒரு விடயம்.

இத்துனை தெறியாத அறிவற்ற ஆண்கள் எத்துணை பேர் எம்மில் உள்ளனர்...

☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿☝🏿

உண்மையை கூறுங்கள் நீங்கள் உங்களது மனசாட்சியை கொண்டு சொல்லங்கள் எம்மில் எத்துணை பேர் எம்முடைய்ய குடும்பத்தை உரிய முறையில் வழிநடாத்துகிறோம்...சொல்லப்போனால் மிக்க மிக்க குறைவு பொதுவாக எமது ஊர்களை எடுத்துக்கொண்டாள்..... சரி அதை விட எம்முடைய அக்கம் பக்கத்தில், எம்முடைய எத்துணை உற்றார் உரவிணர்கள், நம்முடைய சகோதரிகளின் திருமண வாழ்க்கை கூட கண்ணீரில் கறைந்தோடுகிறதை நாம்மில் எத்துணை பேர் கண்ணூடாக கானக்கூடியதாய் இருக்கிறது.

அவர்களின் குடும்ப வாழ்க்கையில் எத்துணை ஆண்களின் ஒழுக்க மீனம் நடைமுறையால் அன்றாட தன்னுடைய மனைவி குழந்தைகளுக்கு செலவு செய்யும் விடயத்தில் கஞ்சத்தனம் காட்டக்கூடிய ஆண்கள் கூட எத்துணை பேர் உள்ளனர்.இது மிகவும் தண்டிக்கப்படக்கூடிய விடயமாகும்.

சகோதர சகோதரிகளே சுருக்கமாக இவ்விடத்தில் கூறுகிறோம்...என்ன வென்றால் நம்முடைய வாழ்க்கையில் நாமோ அல்லது நம்முடைய குடும்பம் மோ அல்லது நம்முடைய உடன் பிற சகோதரர்களோ, சகோதரிகளோ சில சந்தர்ப்பங்களில் பெரும் அளவில் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றதை நாம் அறிவோம் என்றால்.... நாம் ஒன்று நினைக்க வேண்டும் நாம் நம்முடைய வாழ்க்கையில் யாரயாவது கண்ணீர் சிந்தக் காரணியாக இருந்தோமா.....அல்லது எம்மால் எம்முடைய மனைவி குழந்தைகளுக்கு ஏதாவது தவறுகள், குறைபாடுகள் ஏற்படக் காரணமாக இருந்தோமா....கண்டிப்பாக இதை யாரும் உணர்வதில்லை சகோதர சகோதரிகளே!!!!😢😢😢😢😢😢😢😢😢ஆனால் எமக்கு தெரியாது, நாம் அறிய மாட்டோம் நம்முடைய குடும்பத்தோடு நாம் எவ்வாறு தகராறு செய்திரிப்போம்.

எம்மால் எவ்வளவு அணியாயங்கள் நடந்தேரிக்கும் , எம்மால் எத்துனை வாழ்க்கை பிரிவிற்கு காரணமாக அமைந்திரிக்கும்..., எத்துணை வாழ்க்கையை சீர் குழைத்து சின்னா பின்ன படுத்த காரணமாக இருந்திரிப்போம்..... ஆனால் அதை நாம் சிறிதும் பொருற் படுத்திரிக்க மாட்டோம்....சகோதர சகோதரிகளே!!!!அழ்ழாஹ் வின் புறத்திலிருந்து வரக்கூடிய சோதனைகள் வேரு....அது அல்லாஹ்வின் பக்கம் நம்முடைய தொடர்பை சீர்திருத்தி இன்னும் அவனோடு நெருங்குவதற்கான அது இந்த உலகத்தில் அல்லாஹ்வை மறந்து வாழக்கூடியவர்களுக்காக வரக்கூடிய சோதனை வேறு நன்பர்களே!!!!ஆனால் நாம் இங்கு சுட்டிக் காட்டுவது இன்று அதிகமானவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாட்டு தனமாக நடந்து கொண்டு அழ்ழாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள்.

🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

ந ஊது பிழ்ழாஹ்அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தண்டனை என்பது சொல்ல முடியாது நாம் ஒருத்தருக்கு ஒரு தீங்கிழைத்தால் அதனுடைய தாக்கம் எம்மை எப்போதும் அனுபவிக்கக்கூடும்.

அது ஒரு வருடம் கடந்ந பின்னர் ஏற்படலாம் 10 வருடத்திற்கு பின்னர் ஏற்படலாம் நாம் செய்த தவரை மரந்திரிப்போம்.... அந்த தவரு எம்மை மரக்காது. அது எங்களை மட்டும் பாதிக்காது எம்மால் எம்முடைய சகோதர சகோதரிகளுக்கும் தான் அதிகமான பாதிப்பு ஏற்படும்.

😥😥😥😥😥😥😥😥😥

ஏ ஆதமுடைய மக்களே இன்னும் உங்களுக்கு திருந்துவதற்கு காலம் நெருங்கவில்லயா????? தயவு செய்து அல்லாஹ் வை அஞ்சுங்கள்.அனீதி இழைக்கப்பட்டவர்களின் பிராத்தனைக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் எந்தத்திரையும் இல்லை.... இது நபி மோழியாகும்.

எப்போதாவது எம்முடைய கண்மனி தூதரின் சொல் வாக்கு பொய்யானதா....அனியாயமான முறையில் சில முணாபிக் தனமான பொய்யான வாக்குருதிகளுக்கு அவர்களின் பேச்சில் நம்பி தன்னுடைய வாழ்க்கையை அர்பனித்து.... பாதிப்புக்குள்ளானவர்கள், மோசடிக்குள்ளானவர்கள் நம்மில் எத்துணை பேர் உள்ளனர்.

அப்படி தீங்கு இழைக்கப்பட்டவர்களின் கண்களால் வரக்கூடிய தண்ணீர் நெருப்பு சகோதரர்களே!..... உங்களை எச்சரித்துக்கொள்கிறேன்.... ஒரு சகோதரர் என்ற அடிப்படையில் இப்படியான தவருகளை எச்சரிக்கை செய்கின்றேன்.இனி உள்ள காலங்களில் கூட சந்தோஷமாக எம்முடைய குடும்பம்த்தோடு குழந்தைகளோடு அன்பாக அக்கறையுடன் உணவழித்து உண்டு மகிழுங்கள்.

ஒவ்வொன்றுக்கும் மறுமை நாளில் கேள்வி கணக்கு உண்டு சகோதரிகளே!இவ்வாறு தவரு செய்தவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள் அணீதி இளைத்தவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள் அவர்கள் மன்னிக்காத வரை அல்லாஹ் எம்மை மன்னிக்கவும் மாட்டான்.நாம் எத்துணை உம்ரா, ஹஜ் செய்தாலும் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது அல்லாஹ்விடம்.யார் யார் வாழ்க்கை மிக மோசமான நிலையில் அமைந்ததோ.... யாருடைய வாழ்க்கை மிக பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளதோ அல்லாஹ் அனைவருக்கும் இந்த புனித ரமழான் மாதத்தில் அருள் புரிந்து கிருபை செய்வானாக.திருமண வாழ்க்கை கால் பதிப்பதற்கு முன்னால் எத்தனையோ அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயமான விடயங்கள் உள்ளது அவை தெறிந்தது கொண்டுதான் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணம் பந்தத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.ஆனால் எம்முடைய சமுதாயத்தில் இருக்கக்கூடிய தாய்மார்கள்.... அதற்கு சிறு துளி கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை....உண்மையாக சொல்லப்போனால் இவ்விடத்தில் பெற்றோர்கள் தான் தவறு செய்கின்றோம்.😢😢😢😢😢😢😢😢😢அல்லாஹ் வழிகேட்டை விட்டும் உங்களையும் என்னையும் பாதுகாப்பானாக.🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

✍️ முகநூல் மூலம்..

Written by MindTopper Editor
We write and curate insightful essays, technology updates, business trends, and educational topics exclusively in Tamil to empower minds.

Discussion (3)

Neha Jul 02, 2026

கல்வி மற்றும் பொதுஅறிவு சார்ந்த மிகச் சிறந்த கட்டுரை. பயனுள்ளதாக இருந்தது.

பிரியா Jul 02, 2026

பகிர்ந்தமைக்கு நன்றி, நல்லதொரு பதிவு.

Siddharth Jul 02, 2026

நல்ல பதிவு, மற்றவர்களுக்கும் பகிர்கிறேன்.